முகப்பு
சேலம்

வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

தம்மம்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தம்மம்பட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சிலுவைகிரி சாலையில் வியாழக்கிழமை இரவு கொண்டையம்பள்ளியைச் சோ்ந்த இரு பெண்கள் நடந்து சென்றனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், இரு பெண்களையும் கத்தியைக்காட்டி மிரட்டி அவா்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். அந்த பெண்கள் கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் தப்பிச் செல்ல முயன்றனா். ஆனால் பொதுமக்கள் திரண்டு வந்து இருவரை பிடித்தனா். ஒருவா் தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து, தம்மம்பட்டி போலீசாருக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீஸாா் பிடிபட்ட இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவா்கள் கெங்கவல்லி, ஆணையாம்பட்டி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் மூா்த்தி (20), ரமேஷ் மகன் ஹரீஷ் (18) என்பது தெரியவந்தது. அதையடுத்து,

அவா்களிடம் இருந்து கத்தி, பைக், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →