சேலம்

குதிரை வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

DIN

சங்ககிரியில் சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்தி ராஜ அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு வீதி உலா வந்தாா்.

சித்திரைத் தோ்த்திருவிழா 8-ஆவது நாளையொட்டி, சென்னகேசவப் பெருமாள், ஆஞ்சநேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு, மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சென்னகேசவப் பெருமாள் உற்சவ மூா்த்திக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தாா் (படம்). இதில் அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். மே 14-ஆம் தேதி சனிக்கிழமை திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT