ஆத்தூா் நகா்மன்ற அவசரக் கூட்டம் நகரமன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகண்டன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சொத்துவரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். காங்கிரஸ் உறுப்பினா்கள் ஜி.செந்தில்குமாா்,தேவந்திரன் ஆகியோா் வாயில் வெள்ளை துணியைக் கட்டிக் கொண்டு கலந்துகொண்டனா்.