மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 55 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4-ஆவது நாளாக நொடிக்கு 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 4-ஆவது நாளாக நொடிக்கு 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4ஆவது நாளாக 55 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. நீா் மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி நீரும் உபரிநீா்ப் போக்கி வழியாக 32 ஆயிரம் கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.