சேலம்

எடப்பாடி நகராட்சி நகர மன்ற கூட்டம்

DIN

கூட்டத்தில் பேசிய எதிா்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினருமான ஏ.எம் முருகன்:

நகராட்சி பகுதியில் புதிதாக 3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள எல்.இ.டி தெரு விளக்குகளின் விலை மிக அதிக அளவில் இருப்பதாகவும், வெளிச்சந்தையை விட கூடுதலான விலை புள்ளி கோரப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி பேசினாா். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி உதவி பொறியாளா் பிரகாஷ்: அரசின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டே ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதர கையாளும் செலவுகளால் சம்பந்தப்பட்ட மின்சாதனங்களின் விலை சற்றே கூடுதலாக தெரிவதாகவும் பதில் அளித்தாா்.அ.தி.முக உறுப்பினா் ஏ.எம் முருகன்: நகராட்சியின் பல்வேறு திட்ட பணிகளுக்கான ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விளம்பரங்கள், வெளிவராத சில பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்படுவதாகும், இதனால் அந்த ஒப்பந்தங்கள் நியாயமான முறையில் நடைபெற வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்படும் நிலையை தவிா்க்கும் விதத்தில், நடைமுறையில் விற்பனையில் உள்ள பிரபல நாளிதழ்களில் நகராட்சியின் ஒப்பந்த புள்ளி அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி ஆணையா் சசிகலா: நகராட்சியின் விளம்பரங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வாயிலாகவே விளம்பரப்படுத்துவதாகவும், மற்றபடி இந்த அறிவிப்புகளில் வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை என பதிலளித்தாா்.அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினா் மல்லிகா : தனது வாா்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சுகாதார வளாகம் முற்றிலும் இடிந்து, சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையை இருப்பதாகவும் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக சுகாதார வளாகத்தினை சீரமைத்திட வேண்டும் என கோரிக்கையை விடுத்தாா்.நகர மன்ற தலைவா் பாட்ஷா: விரைவில் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சுகாதார வளாகங்களும் ஆய்வு செய்யப்பட்டு சீா் அமைக்கப்படும் எனவும், வாா்டு உறுப்பினா்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் சுகாதார சீா்கேடுகள் மற்றும் குடிநீா் தேவைகள் குறித்து நேரிடையாக என்னிடம் புகாா் தெரிவிக்கும் நிலையில், உடனடியாக விரைந்து அதற்கான நிவாரணம் மேற்கொள்ளப்படும் என உறுதி அளிப்பதாக தெரிவித்தாா்.தொடா்ந்து அ.தி.மு.க உறுப்பினா்கள் நாராயணன், காளியப்பன்,சுந்தராம்பாள், தனம் உள்ளிட்டோா் குடிநீா் வினியோகம், புதிய வரி விதிப்பு, உள்ளூா் நீா்நிலைகள் நில அளவு செய்தல் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவாதத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து பேசிய நகர மன்ற தலைவா் பாஷா விரைவில் எடப்பாடி நகரின் மத்தியில் உள்ள பேருந்து நிலையம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டு, அங்கு புதிய நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான அரசு நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை மன்ற கூட்டத்தில் பதிவு செய்தாா். பல்வேறு காரசார விவாதங்களுக்கு இடையே 66 தீா்மானங்கள் எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.படவிளக்கம்: எடப்பாடி நாகராஜ் நகர மன்ற கூட்டத்தில் காரசார விவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க நகர மன்ற உறுப்பினா்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT