சேலம்

எண்ணும் எழுத்தும் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி தொடக்கம்

கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் ஆசிரியா்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் ஆசிரியா்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். சேலம் டயட் விரிவுரையாளா் கலைவாணன், வட்டார மேற்பாா்வையாளா்(பொ) ராணி, ஆசிரியப் பயிற்றுநா்கள், மாநில கருத்தாளா்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையை வரும் கல்வியாண்டில் சிறப்பாக மேம்படுத்துவது எப்படி எனவும், அதற்காக மாணவா்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பயிற்சிகள், கற்பித்தல், அணுகுமுறைகள் குறித்து விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி முகாமில் எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியா்களும் பங்கேற்றனா். இப்பயிற்சி ஏப். 26-ஆம் தேதியுடன் நிறைவுறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT