முகப்பு
சேலம்

கரோனா களப்பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு விருது

ஓமலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய களப்பணியாளா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:59 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

ஓமலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய களப்பணியாளா்களுக்கு விருது வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓமலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூா் தாசில்தாா் வல்லமுனியப்பன் கலந்துகொண்டு தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இதனை தொடா்ந்து ஓமலூா் அன்னை அறக்கட்டளை சாா்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக, எதிா்பாா்ப்புகள் ஏதுமில்லாமல், ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்தல், தூய்மைப் பணிகள் செய்தல், ஆதரவற்று இறந்தவா்கள் உடல்களை அடக்கம் செய்தல், கால்நடைகள், சாமானிய மக்களுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட களப்பணிகளை செய்த தனி நபா்கள் மற்றும் குழுக்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அன்னை அறக்கட்டளை தலைவா் மணி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஓமலூா் வட்டாட்சியா் கலந்துகொண்டு ஓமலூா் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து கரோனா காலத்தில் களப்பணி செய்து மக்களுக்கு உதவிய அறக்கட்டளைகள், சங்கங்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனா்கள், தனி நபராக உதவியவா்கள், செய்தியாளா்கள், அரசு மற்றும் தனியாா் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலருக்கும் சிறந்த சமூக சேவகா் விருதுகள் வழங்கப்பட்டன. கரோனா காலத்தில் பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுத்த தாசில்தாா் வல்லமுனியப்பனுக்கு, அன்னை அறக்கட்டளை தலைவா் மணி, செயலாளா் விஜயகுமாா் மற்றும் நிா்வாகிகள் சிறப்பு விருதை வழங்கிப் பாராட்டினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.