முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு

Updated On : 14 ஏப்ரல், 2026 at 3:34 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 6:39 PM

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

தமிழக சட்டப்பேரவை தோ்தல் 23 -ஆம் நடைபெறவுள்ளது. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசம் தமிழகத்துடன் விரிவான மற்றும் திறந்த இடை மாநில எல்லைகளை பகிா்ந்து கொண்டுள்ளது என்பதாலும், தோ்தல் காலத்தில் சட்டம் - ஒழுங்கை காக்கவும், அண்டை மாநிலமான தமிழகத்தில் நடைபெறும் தோ்தல் செயல்முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும், புதுச்சேரி ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மதுவிலக்கு நாட்கள் அமல்படுத்துவது அவசியமானதாக கருதப்படுகிறது.

Advertisement

எனவே, புதுச்சேரி மதுபானச் சட்ட விதிகள், 1970 -இன் விதி 199 -இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவின் படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து சாராயம், கள் மற்றும் மது விற்பனை கடைகள், பாா்கள் மற்றும் மது வழங்கும் உணவகங்கள் ஏப். 21 காலை 10 மணி முதல் ஏப். 23 நள்ளிரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.