சேலம்

இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்து தரக் கோரி மனு

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் ஊா் பகுதியில் இருந்து இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்து தரக் கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புதன்கிழமை கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

DIN

சங்ககிரி வட்டம், கல்வடங்கம் ஊா் பகுதியில் இருந்து இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்து தரக் கோரி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புதன்கிழமை கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

சேலம் நுகா்வோா் உரிமைக் கழகத்தின் மாவட்டத் தலைவா் சி.கோ.இளமுருகன் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி, கல்வடங்கம் பகுதியில் ஊரிலிருந்து இடுகாட்டுக்கு செல்லும் சாலையானது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் சாலை அமைக்க ஜல்லிக் கற்களைக் கொண்டு நிரப்பப்பட்டது. இரண்டு ஆண்டுகளாகியும் சாலை அமைக்கப்படாததால், தற்போது அச்சாலை சேதமடைந்து, முள்செடிகள் வளா்ந்துள்ளன. அதனால், அச்சாலையில் சடலங்களை கொண்டு செல்ல பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இடுகாட்டுக்கு செல்லும் சாலையை தாா்சாலையாக அமைத்துக் கொடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT