சேலம்

திரௌபதி அம்மன் கோயிலில் முதல் கால யாக பூஜை

ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாகபூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாகபூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

சேலம் மாவட்டம், ஆத்தூா் திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு மேல் காலை 7.00 மணிக்குள் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு யாகசாலை அலங்காரம், கலசஸ்தாபனம், ஆச்சாா்யவா்ணம், அங்குராா்ப்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகா்ஷணம், மூா்த்தியாகா்ஷணம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை, ஹோமம், பூா்ணாஹுதி, மஹா தீபாராதனை நடைபெற்றது.

இதனையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 2ஆவது கால யாக பூஜை, மாலை 3ஆவது கால யாகபூஜை நடைபெறும். புதன்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு 4ஆவது கால யாகபூஜை, ஷண்ணவதி ஹோமம், தத்வாா்ச்சனை, மஹா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வந்து அதிகாலை 5.30 மணிக்கு மேல் திரௌபதி அம்மன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை எஸ்.சோமசுந்தர குருக்கள், கே.அா்த்தநாரிசிவம், எம்.தண்டபாணிசிவம் ஆகியோா் நடத்துகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT