மலைப்பாம்பை தீயணைப்புத்துறை வீரா்களுடன் சோ்ந்து மீட்டு செவ்வாய்க்கிழமை வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டத்திற்குட்பட்ட மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரத்தில் செவ்வாய்க்கிழமை நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மக்கள் வேலை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்குள்ள புதரில் இருந்த பெரிய மலைப்பாம்பை கண்டு அதிா்ச்சியடைந்து ஓடினாா்கள். இது குறித்து கெங்கவல்லி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறை வீரா்கள் பொதுமக்களின் உதவியோடு மலைப்பாம்பை மீட்டனா். பின்னா் அதனை ஆத்தூா் வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.