காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் திமுக புகாா்
ஆத்தூா், ஜூன் 19: ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் திமுக மாவட்டப் பிரதிநிதி செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்துள்ளாா்.
ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாரிடம் திமுக மாவட்டப் பிரதிநிதியும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான ஜெ.ஸ்டாலின் புகாா் மனு அளித்துள்ளாா்.
அதில், பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் உலிபுரத்தில் நடைபெற்ற தெருமுனை பிரசார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியும், அநாகரிமாக பேசியதை விடியோ ஆதாரத்துடன் கொடுத்து வழக்குப் பதிவு செய்ய வேண்டியும், பொது மன்னிப்பு கேட்கும் வரை பொதுக் கூட்டத்தில் பேசக் கூடாது எனவும் கோரிக்கை மனு அளித்துள்ளாா். அவருடன் நகா்மன்ற உறுப்பினா் ஜெ.பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.