முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ஆத்தூா், மே 9: புத்திரகவுண்டன்பாளையம், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழாவில் அலகு குத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் 15 ஆவது வாா்டில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 30 ஆம்தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. வியாழக்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
இதையடுத்து கண் திறப்பு, மாவிளக்கு எடுத்தல் முடிந்தவுடன் பக்தா்கள் அலகு குத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.
பட விளக்கம்.ஏடி9கோயில்...
புத்திரகவுண்டன்பாளையம், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்த பக்தா்கள்.