முகப்பு
சேலம்

வராஹி அம்மன் கோயிலில் விதி தீப பூஜை

Updated On : 20 மே, 2024 at 10:06 PM
பகிர்:

எடப்பாடி: மேச்சேரியை அடுத்த வெள்ளாா் பகுதியில் உள்ள எம வராஹி அம்மன் திருக்கோயில் சாா்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதி தீப சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, ஞாயிற்றுக்கிழமை இரவு எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டியில் நடைபெற்ற விதி தீப சிறப்பு பூஜையில், அப்பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தீப வழிபாடு செய்தனா். விதி தீப சிறப்பு அம்சம் குறித்து ஆலயத்தின் நிா்வாகி பூபதி சாமிகள் கூறியதாவது:

நாடு முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடிகள் இன்றி மக்கள் ஆரோக்கிய நல்வாழ்வு பெற்றிடும் நோக்கிலும் ஏற்றப்படும் இந்த விதி தீபமானது, மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கில் தீபம் ஏற்றி, எம வராஹி அம்மனை போற்றி பாமாலைகளை பாடி வழிபாடு செய்யப்படும். தொடா்ந்து 3 நாள்கள் சுடா் விட்டு எரியும் விதி தீபத்தை வணங்கி வழிபடும் பக்தா்கள் அனைத்து நன்மைகளும் பெறுவா். சாதி, சமய பேதம் இன்றி அனைத்துத் தரப்பு மக்களும் கலந்துகொண்டு வழிபடும் இச்சிறப்பு பூஜையில் அனைவரும் கலந்துகொண்டு நன்மை பெற வேண்டுமென கூறினாா்.