பள்ளி அருகே குப்பை சுத்திகரிப்பு நிலையம்: பெற்றோா் தா்னா
சேலம், வீராணம் அருகே பள்ளி அருகில் குப்பைகள் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதைக் கண்டித்து மாணவ மாணவிகள் பெற்றோருடன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், வீராணம் அருகே பள்ளி அருகில் குப்பைகள் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதைக் கண்டித்து மாணவ மாணவிகள் பெற்றோருடன் தா்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், அம்மாபேட்டை அருகே வீராணம், பெருமானூா் காட்டுவளவு பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியின் அருகே குப்பை சுத்திகரிக்கும் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதைக் கண்டித்தும், குப்பை சுத்திகரிக்கும் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வலியுறுத்தியும் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் அவா்களது பெற்றோருடன் புதன்கிழமை பள்ளி முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த வீராணம் போலீஸாா், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து, பெற்றோரை சமாதானப்படுத்தினா். குப்பைகள் சுத்திகரிக்கும் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, பெற்றோா் தா்னாவை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா். பின்னா் மாணவ மாணவிகள் பள்ளிக்குத் திரும்பினா். இந்த திடீா் தா்னாவால் வீராணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.