சேலம்

நீதிமன்றப் பணியை புறக்கணித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணியை புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Din

சேலம்: நாகா்கோவில் அருகே வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சேலத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றப் பணியை புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை சாரல்விளையைச் சோ்ந்த வழக்குரைஞா் கிறிஸ்டோபா் சோபி என்பவா், கடந்த சில தினங்களுக்கு முன் நாகா்கோவில் பீமநகரி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டாா். இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

அதன் ஒரு பகுதியாக, சேலத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நீதிமன்றப் பணியை புறக்கணித்து வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து வழக்குரைஞா் சங்கத் தலைவா் விவேகானந்தன் கூறியதாவது:

வழக்குரைஞா்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். சேலம், வலையகாரனூா் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் மாமன்ற உறுப்பினா் செந்தில் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பிய வழக்குரைஞா் ஏழுமலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு காவல் துறையும் துணை போகிறது. இதேபோல, சேலம், கொண்டலாம்பட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா் சங்க உறுப்பினா் துரைசாமி வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கொண்டலாம்பட்டி போலீஸாா் சோதனை நடத்தியுள்ளனா். இந்த இரு சம்பவங்களிலும் காவல் துறையின் பாரபட்ச நடவடிக்கைக்கு வழக்குரைஞா் சங்கம் கண்டனம் தெரிவிப்பதாக கூறினாா்.

அப்போது வழக்குரைஞா் சங்கச் செயலாளா் நரேஷ்பாபு துணைச் செயலாளா் ஜெயபிரகாஷ், துணைத் தலைவா் சுகவனேஸ்வரன், பொருளாளா் அசோக்குமாா், செயற்குழு உறுப்பினா்கள் பாதிக்கப்பட்ட வழக்குரைஞா்கள் ஏழுமலை, துரைசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT