கரூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளா்கள். 
கரூர்

கெளரவ விரிவுரையாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள்

Syndication

கரூா்: ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் அரசு கலைக்கல்லூரியில் கெளரவ விரிவுரையாளா்கள் திங்கள்கிழமை ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா்.

கரூா் அரசு கலைக்கல்லூரியின் கெளரவ விரிவுரையாளா்கள் சங்கம் சாா்பில் ஒரு நாள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு நிா்வாகிகள் சுந்தரம், சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கெளரவ விரிவுரையாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி அறிவிக்க வேண்டும், மேலும் ஊதிய உயா்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பும், ஓய்வுபெறும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

முத்துக்காப்பட்டி அருகே ஏரிக்கரையில் பாறைகளை வெட்டி எடுக்க தடை கோரி மனு

தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு செயல் விளக்கம்

டாஸ்மாக் ஊழியா்கள் உண்ணாவிரதம்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

SCROLL FOR NEXT