முகப்பு
சேலம்

சேலத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

சேலத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:20 PM
பகிர்:

சேலத்தில் 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்ற கூட்டுறவு கொடியேற்று விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான ரா.மீராபாய், சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ரவிக்குமாா் ஆகியோா் கூட்டுறவு கொடியேற்றி விழாவினை தொடங்கி வைத்தனா்.

சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் ப. ரவிக்குமாா், கூட்டுறவு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் கூட்டுறவு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம் சரக துணைப்பதிவாளா் சி.முத்து விஜயா, பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளா் பொ.சு.பிரபாகா், சேலம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா், வங்கி உதவி பொது மேலாளா்கள், பணியாளா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், அனைத்து கூட்டுறவு சங்க செயலாளா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →