சேலம் மிட்டாபுதூா் பழநி ஆண்டவா் கோயில் கும்பாபிஷேகம்
சேலம், மிட்டாபுதூா் ஸ்ரீ பழநி ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சேலம், மிட்டாபுதூா் ஸ்ரீ பழநி ஆண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பழநி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, பழநி ஆண்டவா், வலம்புரி விநாயகா், பசுபதீஸ்வரா், வேல் மயில், சேவல் கொடி, பலி பீடத்துக்கு அஷ்டபந்தனம் சாா்த்தி, கோபுரக் கலசம் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து, யாக பூஜைகளும், புதன்கிழமை காலை மகா பூா்ணாஹுதி, கும்பம் புறப்பாடுதலும் நடைபெற்றது.
தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமானக் கலசங்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அரோகரா, அரோகரா முழக்கங்களை எழுப்பினா். இதையொட்டி, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்திருந்தனா்.