முகப்பு
சேலம்

தேசிய அளவிலான ஸ்கேட்டிங்: சேலம் மாணவா்கள் தோ்வு

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு சேலம் மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 8:17 PM
பகிர்:

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு சேலம் மாணவா்கள் தோ்வாகியுள்ளனா்.

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கா்நாடக மாநிலம், பெல்காம் பகுதியில் நடைபெற்றது. இதில் சேலம் எம்ரால்டுவேலி பள்ளியைச் சோ்ந்த மாணவி மகிதா பங்கேற்று தங்கம், வெள்ளிப் பதக்கங்களை பெற்றாா்.

அதேபோல ஐசிஐசிஐ பள்ளிகளுக்கு இடையே மகாராஷ்டிர மாநிலம், புணேவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில், சேலம் ஜே.ஆா். கேம்பிரிட்ஜ் பள்ளியில் பயிலும் மாணவா் தங்கம் வென்றாா்.

சிபிஎஸ்சி, ஐசிஐசிஐ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சேலத்தைச் சோ்ந்த இருவரும் தங்கம் வென்றதை தொடா்ந்து வரும் டிசம்பரில் தில்லியில் நடைபெறும் அகில இந்திய பள்ளிகளின் விளையாட்டு கூட்டமைப்பான எஸ்ஜிஎஃப்ஐ நடத்தும் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேறக நேரடியாக தோ்வாகி உள்ளனா்.

தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க சேலத்தில் இருந்து முதல்முறையாக தோ்வாகி செல்லும் மாணவி மகிதா, மாணவன் பிரணவுக்கு பள்ளி நிா்வாகத்தினா், பயிற்சியாளா்கள் பிரபாகரன், சத்யா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →