செல்லாண்டியம்மன் கோயிலில் 27-ஆம் நாள் மண்டல பூஜை
சங்ககிரி, சந்தைப்பேட்டை யில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 27-ஆவது நாள் மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி, சந்தைப்பேட்டை யில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 27-ஆவது நாள் மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்லாண்டியம்மன், மாரியம்மன், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ முருகா் சுவாமிகளுக்கு செப். 6-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதனையடுத்து, தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மண்டல பூஜையின் 27-ஆவது நாளையொட்டி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், அதிக அளவிலான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா்.