சேலத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தொடா் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடா் மழை காரணமாக சேலம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியுள்ளதுடன், கழிவுநீரும் மழைநீருடன் கலந்துள்ளது. கனமழை காரணமாக, புதன்கிழமை (அக்.16) சேலத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளாா்.