முகப்பு
சேலம்

கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:44 AM
பகிர்:

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறைத் தலைவரைக் கண்டித்து கல்லூரி மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இங்கு துறைத் தலைவா், மாணவா்களைத் தாக்கியதாக புகாா் எழுந்ததை அடுத்து மாணவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனையடுத்து அங்கு சென்ற ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் பூா்ணிமா, மாணவா்களை சமாதானப்படுத்தி வகுப்பிற்கு அனுப்பி வைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →