நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இங்கு பணியாற்றும் 55 பேராசிரியா்களில் எட்டு போ் மட்டுமே நிரந்தர பேராசிரியா்களாக உள்ளனா். மீதமுள்ள 47 பேராசிரியா்களும் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இவ்வாறு தமிழக முழுவதும் உள்ள கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளா்கள், பணி நிரந்தரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இவா்களுக்கு ஆதரவாக, நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.