சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா
நரசிங்கபுரம், சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 12 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
நரசிங்கபுரம், சமயபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் 12 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயில் திருவிழா கடந்த 2 ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து சக்தி அழைத்தல், சிறப்பு அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
இதையடுத்து முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கூழ் ஊற்றுதல், முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.