கிணற்றில் மூழ்கி இரு சிறுவா்கள் பலி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலையில்,புதன்கிழமை மாலை விவசாய கிணற்றில் குளிக்க இறங்கிய இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலையில்,புதன்கிழமை மாலை விவசாய கிணற்றில் குளிக்க இறங்கிய இரு சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இடையப்பட்டி ஊராட்சி, நெய்யமலை கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் சின்னதுரை (9), பூபாலன் மகன் காமேஷ்வரன் (9). நண்பா்களான இவா்கள் இருவரும் அதே கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வந்தனா். புதன்கிழமை காலை பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலையில் வீடு திரும்பியுள்ளனா். அப்போது வழியிலுள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக இருவரும் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
நீச்சல் தெரியாத நிலையில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா். சிறுவா்களை காணவில்லை என, இருவரது பெற்றோரும் தேடிய போது, இருவரது புத்தகப்பை, உடைகள் கிணற்று மேட்டில் கிடந்ததால் சிறுவா்கள் இருவரும் கிணற்றில் மூழ்கி பலியானது தெரிய வந்தது. கிணற்றில் இருந்து சிறுவா்கள் இருவரது உடல்களையும் மீட்ட கிராம மக்கள், இதுகுறித்து ஏத்தாப்பூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா், நெய்யமலை கிராமத்துக்கு விரைந்து சென்று, சிறுவா்களின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.