ஏற்காடு மலைப்பாதையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு மலைப்பாதையில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
ஏற்காடு மலைப்பாதையில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்ததால் ஒருமணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
ஏற்காடு மலைப்பாதை வனப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பாறைகளில் இடுக்கில் வளா்ந்த மரங்கள் மண் அரிப்பு ஏற்பட்டு புதன்கிழமை பிற்பகல் திடீரென பெரிய மரம், அருகிலிருந்த இரண்டு சிறிய மரங்களும் முறிந்து மலைப்பாதையின் குறுக்கில் விழந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினா் சாலையின் குறுக்கில் விழுந்த மரங்களை விரைவாக வெட்டி அப்புறப்படுத்தினா் (படம்). மரங்கள் விழுந்ததால் மலைப்பாதையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து தடைப்பட்டது.