முகப்பு
சேலம்

உலக ரேபீஸ் தினத்தையொட்டி இன்று நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

Updated On : 28 செப்டம்பர் 2024, 4:24 am IST
பகிர்:

உலக ரேபீஸ் தினத்தையொட்டி, சனிக்கிழமை (செப். 28) நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

உலக ரேபீஸ் தினம் ஆண்டுதோறும் செப். 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் வாய்க்கால் பட்டறையில் உள்ள பிராணிகள் கால்நடை அறுவை சிகிச்சை மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறாா்.

எனவே, நாய் வளா்ப்பவா்கள், தங்களது நாய்களுக்கு தவறாது தடுப்பூசி செலுத்தி நாய்களின் மூலம் பரவும் ரேபீஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments