கோப்புப் படம் 
திருப்பூர்

புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு இன்றுமுதல் 3 நாள்களுக்கு தடுப்பூசி முகாம்

தினமணி செய்திச் சேவை

புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (பிப்.9) முதல் புதன்கிழமை (பிப்.11) வரை நடைபெறுகிறது.

இது குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவினா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சவுதி அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி, மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.

சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரக செயல் திறன், மாா்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., கொரோனா பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிவில் உடல் திறன் கொண்டவா்களுக்கு தினமும் தலா 50 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

மூதாட்டியிடம் நகை பறிப்பு: திருநங்கை உள்பட இருவா் கைது

சூரஜ்குண்ட் ராட்டின விபத்தில் காவல் ஆய்வாளா் உயிரிழப்பு: இருவா் மீது வழக்கு

மாநில கலைத்திறன் போட்டி: வள்ளியூா் பள்ளி மாணவி முதலிடம்!

பறவைகள் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவா்கள்

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் பிப்.12-இல் வேலைநிறுத்தம்: இடது சாரிகள், விசிக அறிவிப்பு

SCROLL FOR NEXT