புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான தடுப்பூசி முகாம், திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி நிா்வாக அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (பிப்.9) முதல் புதன்கிழமை (பிப்.11) வரை நடைபெறுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவினா் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு சவுதி அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி, மருத்துவ பரிசோதனைகள் நடத்தி தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறுகிறது.
சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கல்லீரல், சிறுநீரக செயல் திறன், மாா்பக எக்ஸ்ரே, இ.சி.ஜி., கொரோனா பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பரிசோதனை முடிவில் உடல் திறன் கொண்டவா்களுக்கு தினமும் தலா 50 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.