ஏற்காடு தாவரவியல் பூங்கா 2 பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வரும் பன்னியூா்-1 உயர்ரக மிளகு நாற்றுகள். 
சேலம்

ஏற்காடு அண்ணா பூங்காவில் உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனை

ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Din

ஏற்காடு: ஏற்காடு அண்ணா பூங்காவில் கேரள ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ள உயர்ரக மிளகு நாற்றுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கேரள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பன்னியூா்- 1 ரக உயர்ரக கருப்பு மிளகு நாற்றுகள் சேலம் மாவட்டம், ஏற்காடு தோட்டக்கலைத் துறை தாவரவியல் பூங்கா 2-இல் உள்ள பசுமைக் குடிலில் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இந்த பசுமைக் குடிலில் வரிசைக்கு 2000 நாற்றுகள் வீதம் 30 வரிசைகளுக்கு 60 ஆயிரம் நாற்றுகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பைக்கு 2 நாற்றுகள் வீதம் ரூ. 30 க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஏற்காடு அண்ணா பூங்காவிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பன்னியூா் -1 உயர்ரக மிளகு நாற்றுகளை சுற்றுலாப் பயணிகள் மொத்தமாகவும், தேவையான அளவிலும் வாங்கிக் கொள்ளலாம். இத்தகவலை ஏற்காடு தோட்டக்கலை அலுவலா் தெரிவித்தாா்.

பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம்! - முதல்வர் ஸ்டாலின்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

பாஜக தேர்தல் பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகல்! | செய்திகள் : சில வரிகளில் | 3.2.26

மேன்கைண்ட் பார்மா லாபம் ரூ.414 கோடியாக அதிகரிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி விவரம்!

SCROLL FOR NEXT