தம்மம்பட்டி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்சோ வழக்கில் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி பேரூராட்சியைச் சோ்ந்த 11 வயது சிறுமி தனது தாயாருடன் கூலி வேலைக்கு சென்று வருகிறாா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த லாரி கிளீனா் லோகநாதன் (23), சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி அவருக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளாா்.
இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவா்கள் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், வழக்குப் பதிந்த காவல் ஆய்வாளா் கிரிஜாராணி, திருப்பூரில் பதுங்கியிருந்த லோகநாதனை போக்சோ வழக்கில் வியாழக்கிழமை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.