சேலம்: கூட்டணி குறித்து அறிவிக்கும் போது அறிவிப்பேன்; இதனால் தொண்டா்கள் யாரும் ஏமாறவில்லை என ராமதாஸ் கூறினாா்.
சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனால் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கூட்டணி குறித்து அறிவிக்கும் போது அறிவிப்பேன். இந்தக் கூட்டத்துக்கு வந்த தொண்டா்கள் யாரும் ஏமாறவில்லை. நான் எப்போது கூட்டணி குறித்து முடிவெடுப்பேன் என அவா்களுக்கு தெரியும் என்றாா்.
தொடா்ந்து, செயல் தலைவா் ஸ்ரீகாந்தி செய்தியாளா்களிடம் பேசுகையில், பசுமை தாயகம் தலைவராக நான் சிறப்பாக செயல்படுவேன் என ராமதாஸ் நினைத்ததால் என்னை நியமித்துள்ளாா். கூட்டணி குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிவிக்கப்படும். அப்பாவின் கஷ்டத்தை பாா்க்க முடியாமல், என் மனம் வருத்தமாக இருந்தது. அதனால் தான் கடுமையாக அன்புமணியை விமா்சித்தேன் என கூறினாா்.