முகப்பு
சேலம்

சேலம் பாரா மெடிக்கல் லேப் சங்க செயற்குழு கூட்டம்

Updated On : 4 ஜனவரி, 2025 at 4:31 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2025 at 10:25 PM

சேலம் பாரா மெடிக்கல் லேப் நல சங்க செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் அகில இந்திய தலைவா் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக அரசு கடந்த நவம்பா் மாதம் வெளியிடப்பட்ட அரசாணை 390-ஐ உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி சென்னை, ராஜராத்தினம் மைதானத்தில் வரும் 12 ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களை தரம் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளா் விஜயகுமாா், சேலம் மாவட்டத் தலைவா் நிசாா் அகமது, செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement