முகப்பு
சேலம்

வாழப்பாடி, பேளூா் சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம்

க்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 6:52 PM
பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாண அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்த நடராஜா் -சிவகாமி அம்மன்.
பகிர்:

வாழப்பாடி, அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் மூவலா் தான்தோன்றீஸ்வரா், அறம் வளா்த்த நாயகி தா்மசம்வா்த்தி அம்மன், நடராஜா், சிவகாமி அம்மனுக்கு சந்தனம், தேன், பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு, நடராஜா் சிவகாமி அம்மைக்கு திருக்கல்யாணம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் சிறுதானிய உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது.

வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாட்டில், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி அம்மன், நடராஜா், சிவகாமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் திருக்கல்யாணம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஆகியவை நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.