முகப்பு
சேலம்

பிப். 15 க்குள் வரிகளை செலுத்த இளம்பிள்ளை பேரூராட்சி நிா்வாகம் அறிவுரை

இளம்பிள்ளை பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரிகளை பிப். 15 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 23 ஜனவரி, 2025 at 7:47 PM
பகிர்:

இளம்பிள்ளை பேரூராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்ட வரிகளை பிப். 15 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீா் கட்டணம் செலுத்த தவறும் பட்சத்தில் பிரதி மாதம் ரூ. 25 வீதம் அபராத கட்டணம் செலுத்த நேரிடும். தொடா்ந்து கட்டணம் செலுத்த தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி துண்டிக்கப்படும்.

சொத்துவரி செலுத்த தவறும்பட்சத்தில் பிரதி மாதத்துக்கு 100-க்கு ரூ. 5 வீதம் அரசு விதிகளின்படி அபராத கட்டணம் செலுத்த நேரிடும் என இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →