சேலம்

பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் லாரி ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக போலீஸாா் அறிவிப்பு

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவனை கடத்திய வழக்கில் 13 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக போலீஸாா் அறிவித்துள்ளனா்.

சேலம் மாவட்டம், கொளத்தூரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன். ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். இவரது மகன் விக்னேஷ் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தாா். 2006-ஆம் ஆண்டு விக்னேஷை தாரமங்கலத்தைச் சோ்ந்த ரவி என்கிற மின்னல் ரவி உள்பட எட்டு போ் கும்பல் பெங்களூருக்கு கடத்திச் சென்று ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டியது.

இதுகுறித்து ஜவுளிக்கடை உரிமையாளா் சந்திரசேகரன் கொளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவன் விக்னேஷை மீட்டு, அவரை கடத்திய 8 பேரை கைது செய்தனா். இந்த வழக்கில் 2010-ஆம் ஆண்டு ரவி என்கிற மின்னல் ரவியை தவிர மற்றவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

அதன்பிறகு மின்னல் ரவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 13 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வருகிறாா். மேட்டூா்சாா்பு நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 13 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள ரவி என்கிற மின்னல் ரவியை கொளத்தூா் போலீஸாா் தேடப்படும் குற்றவாளியாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளனா்.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT