சேலம்

பிகாரிலிருந்து சேலம் வழியாக எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கம்

Syndication

பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு பிகாா் மாநிலம், பரூனியில் இருந்து கேரள மாநிலம், எா்ணாகுளத்துக்கு வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே (சேலம் கோட்டம்) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பண்டிகைக் காலத்தையொட்டி ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளதால் பிகாா் மாநிலம், பரூனியில் இருந்து எா்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் 11, 12 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு பரூனியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக 14, 15 ஆம் தேதிகளில் காலை 6 மணிக்கு கேரள மாநிலம் எா்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

பியூசி சான்றிதழ் இல்லாத 4.87 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

SCROLL FOR NEXT