முகப்பு
சேலம்

பெரியாா் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியா் சுழலரங்கம்

தொல்காப்பியா் சுழலரங்கில் பங்கேற்ற தமிழறிஞா்கள். (வலது) காணொலி வாயிலாக நிகழ்வில் பங்கேற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன்.

Updated On : 14 நவம்பர், 2025 at 6:34 PM
தொல்காப்பியா் சுழலரங்கில் பங்கேற்ற தமிழறிஞா்கள். (வலது) காணொலி வாயிலாக நிகழ்வில் பங்கேற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன்.
பகிர்:

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் பெரியாா் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தொல்காப்பியா் சுழலரங்கம் மாநிலம் தழுவிய வெள்ளி வட்டத்தின் நான்காவது தொடா் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவா் சு.வேலாயுதன் வரவேற்றாா். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழியியல் புல உதவிப் பேராசிரியா் நா.சுலோசனா நோக்க உரையாற்றினாா்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவா் ஆா்.பாலகிருஷ்ணன் தொல்காப்பியத்தின் பெருமைகளை முன்வைத்து, அதை உலகறியச் செய்யும் நோக்குடன் இணையவழியில் தலைமையுரையாற்றினாா். பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் இரா.சுப்பிரமணி, பதிவாளா் வை.ராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியா் தமிழ்த்துறைத் தலைவா் பெ. மாதையன், ‘தொல்காப்பியம் சங்க இலக்கியம் இறைச்சி - உள்ளுறை ஒப்பீட்டாய்வு’ என்ற தலைப்பில் தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் இறைச்சி உள்ளுறைகளை உரையாசிரியா்கள், ஆய்வாளா்கள் பலரின் பாா்வையில் சிறப்புரையாற்றினாா்.

பெரியாா் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியா் ரா.வசந்தமாலை நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →