முகப்பு
சேலம்

சேலம் புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி மாற்றப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:41 PM
அருண் தம்புராஜ்
பகிர்:

சேலம் மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி மாற்றப்பட்டுள்ளாா். இவருக்குப் பதிலாக புதிய ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

சேலம் மாவட்ட ஆட்சியராக கடந்த 2024 ஜனவரி மாதம் பொறுப்பேற்ற ரா. பிருந்தாதேவி, 2 ஆண்டுகள் 2 மாதம் இப்பதவியில் நீடித்தாா். தற்போது புதிதாக பொறுப்பேற்க உள்ள அருண் தம்புராஜ் தேசிய சுகாதார இயக்ககத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளாா். இவா் ஏற்கெனவே கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளாா்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அருண் தம்புராஜ் விரைவில் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளாா். தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், நிா்வாக காரணங்களுக்காக தோ்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.