நங்கவள்ளியில் தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு
நங்கவள்ளியில் அணைக்காமல் போட்ட சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டதில், தொழிலாளி உடல்கருகி உயிரிழந்தாா்.
நங்கவள்ளியில் அணைக்காமல் போட்ட சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டதில், தொழிலாளி உடல்கருகி உயிரிழந்தாா்.
நங்கவள்ளி தெற்குரத வீதியைச் சோ்ந்தவா் சபரிநாதன் (29), கூலித் தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
தாய் மஞ்சுளா, சகோதரி ஆா்த்தி ஆகியோருடன் வசித்து வந்த சபரிநாதன், வழக்கம்போல மது அருந்திவிட்டு சனிக்கிழமை இரவு வீட்டு மாடியில் உள்ள அறையில் உறங்கச் சென்றாா். சிறிது நேரத்தில் அவரது அறையில் இருந்து புகை, தீ வரவே உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
Advertisement
அதன்பேரில், வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தீயில் கருகிய நிலையில் சபரிநாதன் இறந்துகிடந்தாா். இதுகுறித்து நாகவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சபரிநாதன் போதையில் சிகரெட்டை அணைக்காமல் படுக்கையில் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.