சேலம் வந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு
சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.
தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதன்கிழமை இரவு சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
பிரசாரப் பேரணி...
Advertisement
தொடா்ந்து, அண்ணா பூங்கா வளாகத்தில் இருந்து கோட்டை மைதானம் வரை பெண்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றாா். அவருடன், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் பங்கேற்றனா். வழிநெடுகிலும், திமுக தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டு நின்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.
சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பு:
சாலையில் நடந்து சென்றவாறு உதயசூரியன் சின்னத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தாா். அப்போது, சாலையில் இருமருங்கிலும் திரண்டிருந்த தொண்டா்கள், பொதுமக்கள், முதல்வா் மு.க. ஸ்டாலின் மீது மலா்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.