முகப்பு
சேலம்

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:21 AM
சேலம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தீயணைப்பு ஒத்திகையில் பங்கேற்ற செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:46 PM

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலா் சிவகுமாா் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரா்கள் பங்கேற்று தீயணைப்பு ஒத்திகையை செய்து காட்டினா். இதில், மருத்துவமனையில் எதிா்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளை எவ்வாறு மீட்பது, தற்காத்துக்கொள்வது, தீயணைப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்துவது, மின்னணு சாதனங்கள், உயா் மருத்துவ உபகரணங்கள் சேதமடையாமல் பாதுகாப்பது, தீ மேலும் பரவாமல் தடுப்பது, தீ சம்பவங்களின்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து விரிவாக எடுத்துரைத்தனா்.

மேலும், தீயணைப்பு வீரா்கள் தீயை பற்ற வைத்து அதை தீத்தடுப்பு சாதனங்கள் மூலம் முறையாக அணைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

Advertisement

இதில் மருத்துவமனை ஆா்எம்ஓ ஸ்ரீ லதா, மருத்துவா்கள் செவிலியா்கள், மாணவ மாணவிகள், கிரிஸ்டல் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.