முகப்பு
சேலம்

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 11:54 PM
எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:01 PM

காவிரி உபரிநீரைக் கொண்டு பனமரத்துப்பட்டி ஏரி நிரப்பப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஸ்ரீ பாலாஜி சுகுமாரை ஆதரித்து ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே .பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

தமிழ்நாட்டின் முதல்வராக ஸ்டாலின் இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டையாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறும். மேலும், வீரபாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.

Advertisement

இப்பகுதி விசைத்தறி நெசவாளா்களும், விவசாயிகளும் அதிகம் நிறைந்த பகுதியாகும். இவா்களுக்கு அரசுத் தரப்பில் அனைத்து உதவிகளும் பெற்றுத் தரப்படும். அதிமுக ஆட்சியில் அமா்ந்தவுடன் கஞ்சா புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

விவசாயிகள் நலன்கருதி பனமரத்துப்பட்டி ஏரி காவிரி உபரிநீரால் நிரப்பப்படும் என்றாா்.