முகப்பு
சேலம்

தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் கலைப்பு

தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 1:56 AM
பகிர்:

தோ்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்வதை தடுக்க சேலம் மாவட்டத்தில் 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததால் கண்காணிப்புக் குழுக்கள் கலைக்கப்பட்டன. 11 தொகுதிகளில் மொத்தம் ரூ. 8.30 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இதில் ரூ. 2.74 கோடி பணம், ரூ. 33.65 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 25.13 லட்சம் போதைப்பொருள்கள், ரூ. 2.39 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருள்கள், ரூ. 2.57 கோடி மதிப்பிலான பரிசு பொருள்கள் அடங்கும்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களுக்கு ஒருசிலா் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.1.12 கோடி பணம், ரூ. 2.34 கோடி தங்கம், வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ. 3.16 லட்சம் பரிசு பொருள்களை திரும்பப்பெற்றனா். உரிய ஆவணம் இன்னும் தாக்கல் செய்யப்படாததால் ரூ. 4.79 கோடி பணம், பொருள்கள் கருவூலத்திலேயே உள்ளன.