முகப்பு
சேலம்

மரத்தில் இருந்து தவறி கழிவுநீா்த் தொட்டில் விழுந்த பெண் உயிரிழப்பு

சேலம், அம்மாபேட்டையில் முருங்கை மரத்தில் கீரை பறிக்க புதன்கிழமை மரத்தில் ஏறிய பெண் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 1 மே, 2026 at 5:13 AM
பலி - பிரதிப்படம்
பகிர்:

சேலம், அம்மாபேட்டையில் முருங்கை மரத்தில் கீரை பறிக்க புதன்கிழமை மரத்தில் ஏறிய பெண் கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை, நெசவாளா்காலனியைச் சோ்ந்த கந்தசாமி மகள் புவனா (49). இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள முருங்கை மரத்தில் ஏறி கீரை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது, நிலைதடுமாறி அப்பகுதியில் உள்ள கழிவுநீா்த் தொட்டியில் விழுந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரா்கள், புவனாவை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் வழியிலேயே இறந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement