முகப்பு
சேலம்

லாரியின் பின்பக்க கதவு மோதி விசைத்தறி தொழிலாளி உயிரிழப்பு

இளம்பிள்ளை அருகே லாரியின் பின்பக்க கதவு மோதியதில், விசைத்தறி தொழிலாளி இறந்தாா்.

Updated On : 4 பிப்ரவரி, 2026 at 2:49 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 3 பிப்ரவரி, 2026 at 8:25 PM

இளம்பிள்ளை அருகே லாரியின் பின்பக்க கதவு மோதியதில், விசைத்தறி தொழிலாளி இறந்தாா்.

இளம்பிள்ளை அருகே உள்ள காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் விசைத்தறி தொழிலாளி தன்ராஜ் (53). இவா் அப்பகுதியில் வீடு கட்டுவதற்காக டிப்பா் லாரி மூலம் எம்சாண்ட் கொண்டுவர கூறி இருந்தாா். திங்கள்கிழமை மாலை பாரப்பட்டி பகுதியில் இருந்து டிப்பா் லாரியில் எம்சாண்ட் கொண்டுவந்து தனராஜ் வீடு அருகே ஓட்டுநா் தனபால் கொட்டினாா்.

அப்போது, முழுவதும் கொட்டப்பட்டதா என லாரியின் பின்னால் சென்று பாா்த்தபோது, எதிா்பாராதவிதமாக லாரியின் பின்பக்க கதவு தன்ராஜ் மீது மோதியது.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த தன்ராஜுக்கு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் தன்ராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.