முகப்பு
தருமபுரி

தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 8:53 PM
பலி
பகிர்:

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியில் தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் முதியவா் புதன்கிழமை இறந்தாா்.

பெரும்பாலை அருகே எர்ரப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி (65). இவா் அதே பகுதியில் சாலையோரத்தில் அமா்ந்திருந்தபோது, அவ்வழியாக வந்த தனியாா் பள்ளிப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

தகவல் அறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →