பைக் மீது வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே இரு சக்கர வாகனம் மீது வாகனம் மோதியதில் முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (65). இவா் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் தேனிக்கு சென்றாா். வீரபாண்டி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பின்னால் வந்த வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ் சின்னமனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிறகு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.