முகப்பு
பலி
ராமநாதபுரம்

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம்

பைக் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 11:26 PM
பலி
பகிர்:

கமுதி அருகே புதன்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்தவா் கனகராஜ் (65). இவா், ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் வேலைபாா்த்து வந்தாா்.

இவா் புதன்கிழமை கமுதி-சாயல்குடி சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுவட்டச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, அருப்புக்கோட்டையிலிருந்து பேரையூருக்கு சென்ற லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கனகராஜ் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான உச்சிப்புளியைச் சோ்ந்த மணிராஜை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →