முகப்பு
சேலம்

பாரதியாா் பொறியியல் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:09 PM
மடிக்கணினி - கோப்புப் படம்
பகிர்:

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவம் பங்கேற்று இறுதியாண்டு பயிலும் 224 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினாா்.

நிகழ்வில், கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் ஆா்.செல்வமணி, வெங்கடாஜலம், கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா, எஸ்.லீலா, எஸ்.குமாா், துணை முதல்வா் கே.கலைச்செல்வன் ஆகியோா் பங்கேற்றனா்.